இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, October 6, 2011

உடல் வளர்ச்சிக்குப் பயன்படும் காளான்

உடல் வளர்ச்சிக்குப் பயன்படும் காளான்
உலகில் 380,000 வகையான காளான்கள் உள்ளன.
காய்கறிகளின் ராஜாவாக காரட்டைக் குறிப்பிடுகிறார்கள. காய்கறிகளின் இராணியாக காளானைக் குறிப்பிடுகிறார்கள்.
காரணம் என்ன?
100 கிராம் காளானில் 35% புரதச் சத்து உள்ளது. உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது புரதம். முட்டை, இறைச்சி ஆகியவற்றில் புரதம் இருக்கிறது. கொழுப்பும் இருக்கிறது. ஆனால் அவை கொலாஸ்டிரலை இரத்தக் குழாயில் சேமித்து அபாயத்தை ஏற்படுத்திவிடும். காளானில் கொழுப்புச்சத்து இல்லை.
எனவே, பயமின்றிக் காளானை நன்கு சாப்பிடலாம். புரதச்சத்தும் உடலுக்குச் தேவையான சக்தியைத் தந்துவிடும். கொலாஸ்டிரல் சேரும் அபாயமும் இல்லை.
இதனால்தான் சர்க்கரை வியாதி, இரத்த அழுத்தம், இதயவியாதி, மலச்சிக்கல், வளரும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி முதலியனவற்றுக்கு காளான் உணவு சிபாரிசு செய்யப்படுகிறது.
குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் எளிதில் ஜீரணமாக வேண்டும். காளானில் உள்ள மிக முக்கியமான அமிலங்கள் எளிதில் செரிமான சக்தியைத் தந்துவிடுகின்றன.
புரதச்சத்து அதிகமாய் இருப்பதால் இராணி என்று வழங்கப்படும் காளானின் இரும்புச்சத்தும், பலவிதமான வைட்டமின்களும் உள்ளன. அதனால் மருத்துவக் குணங்களும் மிக அதிகம். ஏ வைட்டமின் அதிகமாய் இருக்கிறது.
காளானின் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாத எட்டு வகை அமினோ அமிலங்கள் உள்ளன.
காலரா, அம்மை நோய், விஷக்காய்ச்சல், மலேரியா போன்றவை குணமாகக் காளான் சூப் நல்ல பலன் தரும்.
காளானில் உள்ள ஒரு விதமான பொருள் புற்றுநோய் வைரஸ், பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மையைப் பெற்றுள்ளதையும் கண்டுபிடித்துள்ளார்கள்.
வயிற்றுப்புண், ஆசனப்புண் ஆகியன குணமாகக் காளானை முட்டைக்கோஸ், பச்சைப் பட்டாணி ஆகியவற்றுடன் பொரியலாகச் சமைத்துச் சாப்பிடலாம். பிரியாணி செய்தால் காளான், முட்டைகோஸ் பச்சை பட்டாணி ஆகிய மூன்றையும் தவறாமல், சேர்க்க வேண்டும். இது சத்துணவு, உடல் ஆரோக்கியத்துக்கும் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் இது பயன்படும்.
உடல் நலனில் அக்கறை உள்ள அனைத்து வயதுக்காரர்களும் வாரத்திற்கு இரு நாள்களாவது தக்காளி சூப் போல் காளான் சூப் தயாரித்து அருந்துதல் நலம்.
மட்டன் பிரியர்கள் காளான் சாப்பிட்டால் உடலுக்குச் சக்தி கிடைக்கும். உடலில் கொலாஸ்டிரல் சேராது. இந்தக் காரணத்தால்தான் உலகம் முழுவதும் காளான் உணவு மிகவும் விரும்பிச் சாப்பிடப்படுகிறது.
ஆரஞ்சுப்பழத்தைவிட, 4 மடங்கும், ஆப்பிள் பழத்தைவிட 12 மடங்கும், முட்டைக் கோஸைவிட இரு மடங்கும், புரதச்சத்தும், மருத்துவக் குணங்களும் நிரம்பியது, காளான்.
தாய்ப்பால் வற்ற….
தாய்பாலை வற்றச் செய்ய விரும்பினால் காளான் சூப் சாப்பிட ஆரம்பிக்கலாம். தொடர்ந்து சாப்பிட்டால் ஏழு, எட்டு நாள்களில் தாய்ப்பால் வற்றிவிடும்.
புண்களைக் குணப்படுத்தி டானிக் போல உடலுக்குச் சக்தி தரும் காளானில் வைட்டமின் - ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. வைட்டமின் ‘பி’, ‘டி’, ‘இ’ ஆகியன ஓரளவு உள்ளன.
காளானை முதன் முதலாக உணவாகச் சாப்பிட்டவர்கள் கிரேக்கர்களும், ரோமானியர்களும்தான்.
இன்று தென்னமெரிக்காவின் முனையில் உள்ள டைரா லெஃபியுகோ என்னும் பகுதியில் வசிக்கும் பழங்குடிகளின் முக்கிய உணவாகக் காளான் இருக்கிறது. அவர்களைப் போல் வேறு எந்த ஒரு நாட்டிலும் காளானை அரிசி, கோதுமை போல் முக்கிய உணவாகப் பயன்படுத்துவதில்லை.
அமெரிக்கர்களைவிட ஐரோப்பியர்கள் காளானை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.
இந்தியாவில் எட்டு வகைக் காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்குக் காளான், சிப்பிக் காளான, வைக்கோல் காளான் என மூன்று வகைக் காளான்களை உற்பத்தி செய்து பயன்படுத்துகிறோம்.
இதய நோயாளிகள் வலிகுறைந்து உற்சாகமாய் இருக்க காளான் உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இந்தியாவைப் போலவே அமெரிக்காவிலும் ஆண்டு தோறும் ‘காளான் வளர்த்துப் பணம் குவிப்பது எப்படி?’ என்னும் தலைப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளிவந்துள்ளன. காளான் வளர்ப்பதைச் சொல்லிக் கொடுக்கும் பயிற்சி நிலையங்களும் அதிகம் உள்ளன.
அமெரிக்க அரசு காளான் பற்றிய செய்திச் சுருள்களை அடிக்கடி வெளியிட்டு வருவது ஆச்சரியமான செய்தியாகும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites