இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, November 7, 2011

பாகற்காய்



ஒரு கொடியை தூக்கத் தூக்க ஓராயிரம் பாவக்காய் என்று கிராமங்களில் சொல்வார்கள்அப்படிகொத்தாகக் காய்க்கக் கூடியது பாகற்காய். 'இலைமறைவு காய்மறைவுஎன்ற பழமொழிபாகற்காய்க்கு மிகவும் பொருந்தும்காய் பெரிதாக வளரும்வரை அதன் நிறத்திலேயேகொடியின் நிறமும் (பச்சையாகஇருந்து காயைக் காப்பாற்றும்சட்டென்று பார்த்தால் காய்இருப்பதே தெரியாதுகொடியைத் தூக்கிப் பார்த்தால் அடியில் காய்கள் தொங்கும்.
சரித்திரம்:
வெப்பப்பிரதேச காய்தென்கிழக்கு ஆசியா இதன் பிறப்பிடம் என்கிறார்கள்அமேசான் காடுகள்,கிழக்கு ஆப்ரிக்காதென் அமெரிக்கா போன்ற நாடுகளும் பாகற்காய் வளர சிறந்த இடங்களாகும்.ஆசியர்கள் மிக அதிகமாக சாப்பிடும் உணவு இது.
சீனர்கள் பழங்காலத்திலிருந்தே பாகற்காய் சாப்பிட்டு வந்தனர்சீன மொழியில் ஷான்-கூ-குவாஎன்று பெயர்முதலில் இது தன்னிச்சையாக வளர்ந்து கிடந்ததுவறட்சி காலத்தில் வேறுஉணவு கிடைக்காதபோது இதை உண்டனர்கி.பி 1400-ல் சீனர்கள் இதைப்பற்றி எழுதியுள்ளனர்.முதலில் முட்டை அளவு இருந்தது. 200 வருடங்களுக்குப் பிறகு பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம்லிருந்து 8 இஞ்ச் நீளமுள்ள பாகற்காயை சாகுபடி செய்தனர்இப்போதெல்லாம் ஒரு அடிநீளத்திலும் வளர்கிறது.
வகைகள்:
பாகற்காய் பழ வகையைச் சார்ந்ததுவெள்ளரி குடும்பம்பிட்டர் கார்ட்பிட்டர் மெலன்பால்சம்பியர்பால்சம் ஆப்பிள் என்று பல வகைகள் உள்ளனநாம் பயன்படுத்தும் பாகற்காயை பிட்டர்கார்ட் (Bitter Gourd) என்கிறோம்பாகற்காயின் ஒவ்வொரு பாகமும் உபயோகமானது.
இலையும் கொடியும் சேரும் இடத்தில் பூக்கள் பூக்கும்பிஞ்சு பச்சைக் கலரில் இருக்கும்.முற்றிப் பழுக்க ஆரம்பித்ததும் மஞ்சளாகி பின் சிவப்பாக மாறும்முற்றியதும் காய் வெடித்துதோல் மூன்று பாகங்களாகி மேல்நோக்கி சுருண்டிருக்கும்இதன் எல்லா பாகங்களுமேகசப்புதான்ஊறுகாய்க்குச் சிறந்ததுசெராசி என்ற காட்டு பாகற்காயில் ஒருவகை பிசின்இருக்கும்அதை மெழுகுவத்தி செய்யப் பயன்படுத்துவார்கள்இதன் இலைகளை மேலைநாடுகளில் தேநீர்பீர் தயாரிக்கவும் சூப் மேல் தூவவும் பயன்படுத்துகிறார்கள்.
எப்படி வாங்குவது?:
பச்சையாகதொட்டுப் பார்க்க கெட்டியாகஉள்ளே விதைகள் பிஞ்சாக இருந்தால் சமையலுக்குநல்லதுமஞ்சள் தோல் இருக்கக் கூடாதுபழமாக உபயோகிக்க முழு சிவப்பு நிறமாகவாங்குங்கள்.
பாதுகாப்பது:
பாகற்காயை 2 நாள் வரை ஃப்ரிஜ்ஜில் வைக்கலாம்அதற்கு மேல் வைத்தால் மஞ்சளாகும்.அவ்வப்போது வாங்கி சமைப்பதுதான் நல்லது.
சமைப்பது:
பாகற்காய்க்கு அதன் கசப்பு தான் பலம்பலவீனம் இரண்டுமேகசப்பைக் கொஞ்சம் குறைக்கவேண்டுமானால் மேலேயுள்ள கரடுமுரடான முள்ளைச் சீவிவிடலாம்காயை நீளவாட்டத்தில்வெட்டி விதைகளை நீக்கிவிட்டு உப்பு போட்டு பிசறி வைத்து உபயோகித்தால் கசப்பு குறையும்.சிறிதளவு வெல்லம் அல்லது சர்க்கரை போட்டு சமைத்தாலும் கசப்பு குறைந்து ருசியாகஇருக்கும்பாகற்காயை வேகவைத்துவதக்கிபொரித்துகுழம்பாகஉருளைக்கிழங்கில்அடைத்து என்று பல வகையிலும் சமைக்கலாம்வற்றல் போட்டும் சாப்பிடலாம்.

100 
கிராம் பாகற்காயில் இருக்கும் உணவுச் சத்து:
  • கலோரி 25,
  • கால்சியம் 20 மில்லிகிராம்,
  • பாஸ்பரஸ் 70 மி.கிராம்,
  • புரோட்டின் 1.6%,
  • கொழுப்பு 0.2%,
  • இரும்புச்சத்து 1.8 மி.கிராம்,
  • மினரல்ஸ் 0.8%,
  • பிகாம்ளெக்ஸ் 88 மி.கிராம்,
  • நார்ச்சத்து 0.8%,
  • கார்போஹைட்ரேட் 4.2%,
  • சிறிதளவு விட்டமின் சி.
மருத்துவ குணங்கள்:
இதில் கொம்பு பாகற்காய்மிதி பாகற்காய் என இரண்டு வகைகள் உண்டுஇது உணவுப்பையிலுள்ள பூச்சியைக் கொல்லும்பசியைத் தூண்டும்பித்தத்தைத் தணிக்கும்பெண்களுக்குதாய்ப்பால் சுரக்க உதவும்இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது.
இதை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால்சுரம்இருமல்இரைப்புமூலம்,வயிற்றுப் புழு இவை நீங்கும்நீரழிவு வியாதி உள்ளவர்கள் இதை உட்கொள்வது நல்லது.
பாகற்காயின் கசப்பு விஷம் இல்லைநம் உடல் தனக்கு வேண்டிய அளவு இதன் சத்தைஎடுத்துக்கொண்டு மிகுதியைக் கழிவுப் பொருளாக வெளியே தள்ளி விடும்.
இது எளிதில் ஜீரணமாகாது என்றாலும் கபம்பித்தம்குஷ்டம்மந்தம்காமாலை ஆகியகொடியநோய்களை எளிதில் போக்கும்.
பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்துகாலை,மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.
பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்கவேண்டும்இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம்உடம்பில் ஏறாது.
பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால்ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும்.
பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின்உள்ளும்புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும்பிரசவத்துக்கு பின்வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.
ஒரு பிடி கொடுப்பாகல் இலையுடன் ஐந்தாறு மிளகைச் சேர்த்து காரமற்ற அம்மியில் அரைத்துகண்களைச் சுற்றிப் பற்றுப் போட்டு வர மாலைக்கண் நோய் குணமாகும்.
இரண்டு அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே ஒரு அளவு வெல்லத்தைக் கரைத்துச் சாப்பிட்டால்வயிற்றிலிருக்கும் நாக்குப் பூச்சிகள் சீக்கிரத்தில் வெளியேறிவிடும்.
பாகல் இலைச்சாற்றில் சிறிது அளவு குங்குமப் பூவை அரைத்துச் சாப்பிட்டால் பெருத்திருந்தஆகாரப்பை சிறுத்து வந்து விடும்.
பாகல் இலைச் சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுத்தால் அத்துடன் பாம்பு (கண்ணாடிவிரியன்கடித்த விஷம் நீங்கும்.
பாகல் இலைச் சாற்றை ஓர் அவுன்ஸ் எடுத்து அதில் அரை அவுன்ஸ் நல்லெண்ணெயைக்கலந்து உட்கொண்டால் உடனே காலரா நீங்கும்.
நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவுபெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்துமூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.
பாக்டீரியாடயபெடீஸ்ரத்தப் புற்றுநோய்குடல்புண்ரத்த அழுத்தம்மலச்சிக்கல் என்று பலஉபாதைகளுக்கும் பயனளிக்கக் கூடியது.
மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும்ஜுரத்துக்கும்குடல் புண்வாயுத்தொல்லைகளுக்கும் இது மருந்தாகிறது.
இலையைக் கொதிக்க வைத்துசாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள்.
பாகற்காயின் விதையிலிருந்து எடுத்த எண்ணெயை காயங்களுக்குப் போடுகிறார்கள்.
சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது.
பழம் டானிக்காகவும்மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது.
அமேசான் வனவாசிகள் இதை உணவாகவும் மருந்தாகவும் உபயோகித்தனர்பழம் இலைகளைகறிசூப்பில் கலந்தனர்.
பெரு நாட்டில் பாகற்காயை அம்மைக்கும்மலேரியாவுக்கும் மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.
உடலில் கட்டிபுண்கள் இருந்தால் ஒரு கப் பாகற்காய் சூப் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன்எலுமிச்சைச் சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூன்று மாதங்களுக்குள்ரத்தம் சுத்தமாகி தோல் பளபளப்பாகி விடுமாம்.
சர்க்கரை நோய்:

1
லிருந்து 2 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் கலந்து அல்லது அப்படியே தினம் மூன்றுவேளை சாப்பிட்டால் சர்க்கரை அளவு மூன்று மாதத்தில் குறையுமாம்.
மஞ்சள்காமாலை நோய்:

டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் தண்ணீர் சேர்த்துக் குடித்தால் மஞ்சள்காமாலை குணமாகும்.இதைச் சாப்பிடும் போது கண்ணில் தெரியும் மஞ்சள் நிறமும் உடனே மறையுமாம்.
கல்லீரல் பிரச்னை:

லிருந்து 8 வயதுள்ள குழந்தைகளுக்கு அரை டீஸ்பூன் பாகற்காய் ஜுஸ் கொடுத்து வந்தால்பிற்காலத்தில் எந்த கல்லீரல் பாதிப்பும் வராதாம்.
மூலநோய்:
தினம் இரண்டு வேளை 1 டீஸ்பூன் பாகற்காய் ஜுஸுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால்மூலநோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும்பாகற்காய் சூட்டை கிளப்பும் என்பதால்அளவுக்கு அதிகமாக தொடர்ந்து சாப்பிடக்கூடாது.
சமையல்:
இறால் பிட்டர் கார்ட் ஃப்ரை
தேவை:
  • பாகற்காய் 2,
  • ஒரு டேபிள் ஸ்பூன் காய்ந்த இறால்,
  • ஸ்பூன் நறுக்கிய வெங்காயம்,
  • டீ ஸ்பூன் மிளகாய்த் தூள்,
  • சிட்டிகை மஞ்சள் தூள்,
  • ஸ்பூன்எ ண்ணெய்,
  • அரை டீ ஸ்பூன் சர்க்கரை,
  • உப்பு தேவைக்கேற்ப.
செய்முறை:
பாகற்காயில் விதைகளை நீக்கவும்காயை வட்ட வட்டமாக நறுக்கி உப்பு தடவி அரை மணிநேரம் விடவும்பின்பு தண்ணீர் விட்டு கழுவவும்காயின் கசப்பு நீங்கிவிடும்தண்ணீரை வடித்துவிடவும்எண்ணெயைக் காயவைத்து வெங்காயம்பூண்டு போட்டு பொன்னிறமாகும் வரைவதக்கவும்அதில் பாகற்காய்மிளகாய்த்தூள்சர்க்கரைகாய்ந்த இறால்மஞ்சள் தூள் போட்டுகாய் மிருதுவாகும்வரை வதக்கவும்தேவைப்படி உப்பு போட்டுக் கொள்ளவும்இறாலுக்கு பதில்மீன் பயன்படுத்தியும் செய்யலாம்.


2 comments:

வலை பதிவிற்கு வந்து சென்றமைக்கு நன்றி

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites