இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, January 17, 2012

கர்ப்பப் பை

நான்கு கால்களில் நடக்கும் விலங்குகளுக்கு கர்ப்பப் பை மல்லாந்த நிலையில் இருக்கும் . அதனால், புவி ஈர்ப்பு சக்தியின் பாதிப்பு இருக்காது . இப்படிப் படிந்துகிடக்கும் கர்ப்பப் பையினுள் மரபணுக்களைச் செலுத்தினால், அப்படியே பத்திரமாக இருக்கும், வெளியேறாது . ஆனால், மனிதப் பெண்ணோ இரண்டு கால்களில் செங்குத்தாக நிற்கிறாள் . இதனால் அவள் கர்ப்பப் பையும் புவி ஈர்ப்பு சக்திக்கு உட்பட்டு செங்குத்தாகவே இருக்கிறது . இந்த நிலையில், பெண் உடலில் மரபணுக்களை முதலீடு செய்தால், அவை தங்காமல் வெளியேறிவிடும் . அப்புறம் எப்படி இனம் விருத்தியாவது ?
ஆனால், இரண்டு கால்களில் செங்குத்தாக நிற்பதால் மனித குலத்துக்கு ஏகப்பட்ட ஆதாயங்கள் இருந்தன . கைகளை வேறு வேலைகளுக்குப் பயன்படுத்த முடிந்தது . இதனால் மற்ற மிருகங்களைவிட மிக வேகமாக முன்னேற முடிந்தது . ஆனால், கலவியின்போது இப்படி இரண்டு காலில் நிற்பது அனுகூலமாக இல்லை . அந்தச் சமயத்துக்கு மட்டுமாவது பெண் தன் செங்குத்தான நிலையை விட்டுக்கொடுக்க வேண்டி இருந்தது . அதுவும் விந்தணுக்கள் போய் கருமுட்டையோடு கூடும் அந்தப் பல நிமிடங்களுக்கு அவள் அப்படியே கிடந்தாக வேண்டும் . ' அவ்வளவு நேரத்துக்கு எல்லாம் சும்மா படுத்துக்கிடக்க முடியாது .... சுத்த போர் ! ' என்று பெண் முரண்டு பண்ணினால், மொத்த மரபணு ஆட்டமும் குளோஸ் ! ஆக, பெண்ணை எப்படியாவது மதி மயங்கி சும்மாகிடக்கும் நேரத்தை சுவாரஸ்யமாக்கினால் ஒழிய, மனித மரபணுக்கள் பரவ வாய்ப்பு இல்லை .
மனித இனத்துக்கு மட்டும் இப்படி ஒரு விநோதத் தேவை இருந்ததால்தான், இயற்கை மனிதர்களுக்கு மட்டும் சில பிரத்தியேக மாற்றங்களைச் செய்துள்ளது . உதாரணத்துக்கு, உங்களுக்குத் தெரிந்த ஏதாவது ஒரு மிருகத்தை எடுத்துக்கொள்ளுங்களேன் . எலி, பூனை, நாய், சிங்கம், புலி என்று எந்த மிருகமாக இருந்தாலும், அவற்றின் தோலில் இருக்கும் ரோமம் இரண்டு பாலினத்திற்குமே ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் . ஆண் எலிக்கு எவ்வளவு தோல் ரோமமோ, அதே அளவுதான் பெண் எலிக்கும் . ஆனால், மனிதர்களில் மட்டும் அப்படி இருப்பது இல்லை . பருவம் அடைந்த பிறகு, மனித ஆணுக்கு பெண்ணைக் காட்டிலும் அதிகமான ரோமம் முளைத்துவிடுகிறது . ஆக, மனிதர்களை பொறுத்தவரையில், பெண்ணுக்கு உடம்பில் முடி மிகக் குறைவு . ஏன் இந்த வித்தியாசம் ? நம் நெருங்கிய உறவுக்கார இனமான சிம்பன்சியில்கூட இந்த ரோம வித்தியாசம் கிடையாது . பெண், ஆண் இருவருக்குமே ஒரே மாதிரியான தோல்முடிதான் . மனிதர்களில் மட்டும், அதிலும் பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த வித்தியாசம் ?
ரோமம் அடர்த்தியாக இருந்தால், தொடுதல் உணர்வைத் துல்லியமாகக் கிரகிக்க முடியாது . இதுவே ரோமம் குறைவாக இருந்தால், தொடுகை உணர்வு சுகமாகத் தோன்ற ஆரம்பிக்கும் . ரோமம் குறைவான மனிதப் பெண்ணின் தோலைத் தொட்டுத் தடவி, வருடி, மென்மையாக உரசினால் போதும் . அவளது நரம்புகளில் மின்சாரம் அதிகமாகப் பாய்ந்து, மூளை கிளர்ச்சிக்கு உள்ளாகும் . அவள் மதி மயங்கி நீண்ட நேரத்துக்கு அரைத் தூக்கத்தில் படுத்தேகிடப்பாள் . இந்த அவகாசத்துக்குள் அவளுக்குள் மரபணுக்களை முதலீடு செய்துவிட்டால், நிச்சயம் வம்சம் விருத்தியாகுமே !
---' உயிர்மொழி ' தொடரில் , டாக்டர் ஷாலினி . ஆனந்த விகடன் 1 . 12 . 2010 .

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites