இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Thursday, February 27, 2014

பிளவுஸ் ஸ்பெஷலிஸ்ட்!


blouse Specialist!

Wednesday, February 26, 2014

ஸ்டூடன்ட் பிசினஸ்மேன்! காகிதத்தில் காசு; கலக்கும் கல்லூரி மாணவி!


தங்கம் அணிந்தால்தான் மதிப்பு என்ற காலம் போய், உடைக்கு ஏற்ற வண்ணவண்ண நகைகளை அணிவது இன்றைய ஃபேஷனாக மாறிவிட்டது. ஃபேஷன் நகைகள் பல வகைகளில் தயாரிக்கப்படுகிறது. அழகுக் கொஞ்சும் லோலாக்கு, நெக்லஸ் போன்ற ஃபேன்சி நகைகளைக் காகிதத்தில் செய்து காசு பார்க்கிறார் ப்ரீத்தி. சவீதா பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் ப்ரீத்தி தன் பிசினஸ் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
''பேப்பர் ஜுவல்லரியில் ஆரம்பத்தில் விளையாட்டாகத்தான் இறங்கினேன். பிறகு அதுவே விரும்பிச் செய்யும் ஒரு தொழிலாக மாறிவிட்டது. எனது சிறுவயது முதலே கலை மற்றும் கைவினைப் பொருட்கள் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம்.   பொழுதுபோக்காகக் கலைப் பொருட்கள் தயார் செய்து வீட்டை அலங்கரித்து வந்தேன்.
கல்லூரிக்குச் செல்லும்போது கலைப் பொருட்கள் செய்வதற்கான வகுப்புகள் இருப்பதைத் தெரிந்துகொண்டு நகைகள் வடிவமைத்தல் பிரிவில் சேர்ந்து பயிற்சி எடுத்தேன். நகை வடிவமைத்தலில் பேப்பர் ஜுவல்லரி என்னை மிகவும் கவர்ந்தது. அதை முழுமையாகக் கற்றுக் கொண்டேன்.
புதிய புதிய டிசைன்களில் காகித நகைகளை வடிவமைத்தேன். காகித நகைகளை பல வண்ணங்களில் தயாரித்தேன்.  இந்தக் காகித நகைகளை அணியும் கலாசாரத்தைக் கல்லூரி மாணவர்களுக்கிடையில் அறிமுகப்படுத்தி பிசினஸாக ஆரம்பிக்கலாம் என்ற ஐடியா எனக்குத் தோன்றியது.
ஆரம்பத்தில் நான் தயாரித்த காகித நகைகளை அன்றைய தினத்தில் நான் அணியும் உடைகளுக்கு மேட்சிங்காகப் போட்டு கல்லூரிக்குச் சென்றேன். அதைப் பார்த்த என் சக தோழிகள் 'இந்த நகைகளை எங்கு வாங்கினாய், மிக அழகா இருக்கே’ என்று கேட்க, 'நானே இதைத் தயாரித்தேன்’ என்று சொன்னதும்,  எங்களுக்கும் செய்துகொடு என்று கேட்கத் தொடங்கினார்கள். அதுவரை வெறும் பொழுதுபோக்காக நான்  செய்த விஷயம் எனக்கு பிசினஸ் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.  இன்று என் செலவுகளை நானே பார்த்துக்கொள்கிற அளவுக்குக் கைதருகிறது இந்த பிசினஸ்.
எனது தயாரிப்புகளுக்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்து 'அலன்கிரித்தா’ என்ற பெயரில் ஒரு பிராண்டை உருவாக்கினேன். என் கலெக்ஷன்ஸ் 25 ரூபாயில் தொடங்கி 200 ரூபாய் வரை உள்ளது. லோக்கல் ஆர்டர்கள் மட்டுமின்றி மும்பையிலிருந்து எல்லாம்கூட ஆர்டர் வருகிறது. நான் விலையில் எந்த மாற்றமும் செய்வதில்லை என்றாலும், வெளியூர் ஆர்டர் எனில், அதற்கான டெலிவரிக் கட்டணங்கள் தவிர, வேறு எந்தக் கூடுதல் கட்டணமும் வசூலிக்கமாட்டேன்.
இந்தத் தொழிலுக்கான முதலீடு மிகக் குறைவு. நான் படித்துக்கொண்டே இந்த பிசினஸ் செய்வதால், பெரிய அளவில் முதலீடு செய்யவில்லை. என் தேவைகளை நானே பூர்த்திசெய்யும் அளவுக்கு லாபம் கிடைக்கிறது. தேவைக்குப்போக மீதமுள்ள தொகையைச் சேமித்துவைக்கிறேன்.
இப்போதைக்கு இந்த பிசினஸ் நன்றாகச் செல்கிறது. படிக்கிற நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் உருப்படியாக இதைச் செய்து நாலு காசு பார்ப்பதால் என் பெற்றோருக்கும் என் மீது நல்ல நம்பிக்கை வளர்ந்துள்ளது. கல்லூரியிலும் நல்ல பெயர்தான்! இன்ஜினீயரிங் படித்து முடித்த பிறகு 'அலன்கிரித்தாவை’ இன்னும் பெரிய அளவில் வளர்க்கவேண்டும் என்பது என் ஆசை'' என்றார் ப்ரீத்தி.

மேடை அலங்காரம்... முன்னேறும் மாணவன்

 திருமணம் சார்ந்த தொழில்கள் எதுவாக இருந்தாலும் அதில் உழைப்புக்கு ஏற்ற லாபம் கிடைக்கும் என்பது உறுதி. அந்த வகையில் தன் தொழிலை அமைத்துக்கொண்டு சிறப்பாக முன்னேறி வருகிறார் மதுரை தியாகராசர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு ஆங்கிலம் படித்து வரும் கிறிஸ்டோபர்.
திருமணத்தில் மேடை அலங்காரங்களை மேற்கொள்வது மட்டுமே இலக்கு என்று நின்றுவிடாமல் பள்ளி மற்றும் கல்லூரி விழாக்கள், கட்சி விழாக்கள் என எல்லா மேடைகளிலும் தனது கைவண்ணத்தைக் காண்பித்துப் பார்ப்பவர்கள் அனைவரிடத்திலும் பாராட்டைப் பெற்றுவிடுகிறார் கிறிஸ்டோபர். 'மேடை அலங்காரம் செய்வதில் மாதம் 30,000 ரூபாய் வரை சம்பாதித்து வருகிறேன்' என்று சொல்பவரிடம், 'எப்படி இந்தத் தொழிலை ஆரம்பித்தீர்கள்?’ என்று கேட்டோம்.
''பள்ளிப் பருவத்திலேயே எனக்கு ஓவியங்கள் மீது அதிக ஆர்வம். எந்த ஒரு பொருளைப் பார்த்தாலும், அதில் சில மாற்றங்களைச் செய்து, அதை வித்தியாசமான ஒரு கலைப்பொருளாகத் தயாரித்துவிடுவேன். ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதிருந்தே மேடை அலங்காரம் செய்பவரிடம் சேர்ந்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். பள்ளி செல்லும் நேரம் தவிர, மீதி இருக்கும் நேரத்தில் தேவையான பொருட்களை வாங்குவது, அவருக்கு உதவியாகப் பொருட்களை எடுத்து வைப்பது என்று சிறிய அளவிலான வேலைகளைச் செய்வேன். அதனால் இந்தத் தொழில் மீது எனக்கு ஆர்வம் அதிகரித்தது.
கல்லூரியில் நுழைந்ததும் நான் ஏன் இந்தத் தொழிலை சுயமாகச் செய்யக்கூடாது என்று யோசித்தேன். நாங்கள் வசிப்பது நிலக்கோட்டை அருகில் உள்ள முருகத்தூரான்பட்டி என்கிற ஒரு சிறிய கிராமம். இங்கிருக்கும் மக்களுக்கு மேடை அலங்காரங்கள் பற்றி அவ்வளவாகத் தெரியாது. முதன்முதலில் ஒரு திருமணத்துக்கு நான் மேடை அலங்காரம் செய்தேன். அது அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அன்றிலிருந்து எந்த ஒரு சிறிய விசேஷமாக இருந்தாலும் என்னை அழைத்துவிடுவார்கள். இப்போது என்னிடம் 90,000 மதிப்புள்ள பொருட்கள் உள்ளது.
என் தொழில் முதலீட்டுக்குத் தேவையான பணத்தை என் வீட்டிலிருந்து வாங்கவில்லை. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வேலை செய்து சம்பாதித்தப் பணத்தைச் செலவு செய்யாமல் 25,000 ரூபாய் வரை சேர்த்து வைத்திருந்தேன். அதை வைத்துதான் முதலில் சிறிய அளவில் மேடை அலங்காரங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கினேன்.
கல்லூரி செல்ல ஆரம்பித்ததும் நான் ஒருவனாகத் தொழில் செய்து முதன்முதலில் சம்பாதித்தது 5,000 ரூபாய். அன்றைய தினம் என்னால் மறக்கவே முடியாது. என் உழைப்புக்குக் கிடைத்த முதல் வருமானம் அது.
வருகிற வருமானத்தில் செலவுகள்போகச் சேர்த்துவைத்துதான் மேடை அலங்காரங்களுக்குத் தேவையானவற்றை வாங்குவேன். விதவிதமான பிளாஸ்டிக் பூக்கள், கலர் துணிகள், அலங்காரத் தூண்கள் இவையெல்லாம் வைத்துள்ளேன்.
முகூர்த்த நாட்களில் பல ஆர்டர்கள் கிடைக்கும். பெரிய ஆர்டர் என்றால் மேடை அலங்காரம் நிறைய இருக்கும். இதற்காக நான் 30,000 ரூபாய் வரை கட்டணமாக வசூலிப்பேன். திருமண மண்டபங்களில் முதலிலேயே சொல்லி வைத்துவிடுவேன். அவர்கள் விசேஷம் நடத்துபவர்களிடம் கேட்டு மேடை அலங்காரம் செய்ய வேண்டும் என்றால் என்னிடம் சொல்லிவிடுவார்கள்.
சிறு வயது முதல் தேவையில்லாத செலவுகளைச் செய்யமாட்டேன். தேவையான பொருட்களை வாங்கிவிட்டு, மீதமுள்ள பணத்தில் எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்குத்  தேவையானதை வாங்கிக்கொடுப்பேன்;  அவ்வப்போது வீட்டுத் தேவைக்குக் கொடுப்பதுடன், என்னுடைய கல்விச் செலவுகளையும், என்னுடைய தேவைகளையும் பெரும்பாலும் நானே பூர்த்திச் செய்துகொள்வேன்.
திருமணம் மட்டும் இல்லாமல் கட்சி மீட்டிங், கல்லூரி மற்றும் பள்ளி விழாக்கள் என எல்லாவற்றுக்கும் நான் மேடை அலங்காரங்களைச் செய்து தருவதால் எப்படியும் மாதத்துக்கு இரண்டு ஆர்டர்கள் வரை கிடைத்துவிடும்.
தேர்வு நேரங்களில் ஆர்டர் இருந்தாலும் செய்யமாட்டேன். கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் இதனையே இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் செய்யவேண்டும் என்பதே என் ஆசை'' என்றார் நம்பிக்கையாக!
பெஸ்ட் ஆஃப் லக் கிறிஸ்!

Saturday, February 22, 2014

காலையில இருந்து மாலை வரை வேலை பார்த்து கூலி கேட்டல்





JHONY JHONY ….YES PAPA!
JOB IN COMPANY……..YES PAPA!!
LOT OF TENSION….YES PAPA!!!
TOO MUCH WORK……YES PAPA!!!!
FAMILY LIFE …….NO PAPA!!!!!
BP SUGAR…HIGH PAPA!!!!
YEARLY BONUS…JOKE PAPA!!!!
ANNUAL PAY ……..LOW PAPA!!!!
PERSONAL LIFE……..LOST PAPA!!!!
PROMOTION INCENTIVE…HA! HA!! HA!!!




Thursday, February 20, 2014

திருச்சி பொண்ணுங்க ரொம்ப லக்கி!''




''மாடர்ன் டிரெஸ்ஸா இருந்தாலும் சரி, சேலையாக இருந்தாலும் சரி அதுக்கு உரிய நகைகள் போடும்போதுதான்  மதிப்புகூடும். தங்கம், பேப்பர், குந்தன், கிரிஸ்டல் நகைகளைவிட இந்த ஜங்கிள் நகையைப் போடும்போது எல்லோர் பார்வையும் உங்க மேலதான் இருக்கும். வயசைக் குறைச்சு அழகு கூட்டுற ரகசியம் இதுல இருக்கு'' என்கிறார் திருச்சியில் ஜங்கிள் ஜுவல்ஸ் செய்யும் பாலமுரளி.
நெல், கல் வாழை, யானை குண்டுமணி, மயில் கொன்றை போன்ற 15 வகையான மூலிகைப் பொருட்களைக் கொண்டு  200-க்கும் மேலான டிசைன்களில் நகை செய்கிறார்கள். '' இந்த ஜங்கிள் நகைகள் மாடல், பாரம்பரியம் என எல்லா ஆடைகளுக்கும் மேட்ச் ஆகிறதால, போற இடத்துல ஒரு கூட்டத்தைக் கூட்டிடலாம்'' என்கிறார் பாலமுரளி.
இரண்டு குழுவாகப் பிரிந்து, மிகவும் பொறுமையாகச் செய்யவேண்டிய வேலை இது. வேலை செய்பவர்கள் கைகளை உற்றுக் கவனித்தால் நம் தலை 'கிர்ர்ர்...' என சுற்றும் அளவுக்கு செம ஸ்பீடாக இருக்கிறது. ''பாசிமணி, கிரிஸ்டல், முத்து மணி, பவள மணி இல்லாமல் மூலிகை விதைகளில் இருந்து நகைசெய்ய ஐடியா கொடுத்தது பாலா சார்தான்'' என்கிறார்கள் எக்ஸ்பிரஸ் டீம் தோழிகள்.
''எங்க தாத்தா, அப்பா காலத்துல இருந்தே மூலிகைத் தோட்டம் வெச்சிருக்கோம்.  முன்னாடி, காய்ச்சல்னா வீட்டுலேயே மூலிகை கஷாயம் போட்டுத்தருவாங்க.  இப்போ சின்னதா ஒரு எறும்பு கடிச்சாலும் டாக்டர்கிட்ட ஓடுறாங்க. இப்ப உள்ள மக்களுக்கு மூலிகைகளின் பயனை எப்படிக்கொண்டு சேர்க்கலாம்னு நானும் என் நண்பன் வினோத்தும் சேர்ந்து யோசிச்சோம். இதுல இருந்து கலைப்பொருள், பெண்கள் பயன்படுத்துற நகை பண்ணலாம்னு ப்ளான் பண்ணினோம்.
ஆரம்பத்துல நாங்களே சில மாடல்ஸ் கிரியேட் பண்ணி, அதை ஆர்வமுள்ள பெண்களுக்கும் சொல்லிக்கொடுத்தோம். அதே குழு பெண்களை வெச்சே பெரிய அளவுல நகை பிசினஸ் ஆரம்பிக்க நினைச்சோம். ஆனா, எனக்கு உறுதுணையா இருந்த நண்பன் வினோத், பிசினஸ் ஆரம்பிச்ச அன்னைக்கே விபத்துல இறந்துட்டான். 'அவனே போய்ட்டான்... இனிமே இது எதுக்கு’னு இருந்தேன். ஆனா, ஒரே ஒரு நாள் மட்டுமே பயிற்சிக்குவந்த பெண்கள் யாரும் என்னைவிடலை. அவங்களோட ஆர்வம் காரணமாக நானும் இதுல இறங்கினேன்.
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாடல்ல கிரியேஷன் பண்ணுவாங்க. இங்கே வேலைசெய்ற எல்லோரும் நிறைய படிக்கலைனாலும் திருச்சியைத்தாண்டி சென்னை, கோவைவரைக்கும் ஸ்டால் போட்டு விற்பனை செய்றாங்க. வாங்குகிற எல்லோருமே கேட்கும் முதல் கேள்வி, ' இது எதுல செஞ்சது?’ என்பதுதான். விதைனு சொன்னா நம்பமாட்டாங்க. 25 ரூபாய்ல இருந்து 750 ரூபாய் வரைக்கும் விலையில் இருந்தாலும், யாரும் விலையைப் பார்க்காம டிசைனை மட்டுமே பார்த்து வாங்குறாங்க
.
இந்த நகைகளை பாம்பே, டெல்லி, ஜெய்ப்பூர், பெங்களூரு, அமெரிக்காவரைக்கும் ஏற்றுமதி பண்றோம். அதிலும் வெப்சைட் மூலமா ஆன்லைன்ல நிறைய சேல்ஸ் ஆகுது. நம்ம சைடுல சாதாரண நெல்லுதானேனு அலட்சியப்படுத்துறாங்க. ஆனா, நெல்லுனா என்னன்னே தெரியாத மக்கள் இதை ரொம்ப விரும்புறாங்க.
திருச்சியில உள்ள பொண்ணுங்க ரொம்பக் கொடுத்து வெச்சவங்க. ஏன்னா... அவங்க டிரெஸ்ஸுக்கு மேட்ச்சா, பிடித்த  டிசைன்ல செய்யச்சொல்லி வாங்கிட்டுப் போகமுடியுது. அதிலும் பொண்ணுங்களைவிட அதிகமா பசங்கதான், அவங்க லவ்வரை இம்ப்ரஸ் பண்றதுக்காக வாங்கிட்டுப் போறாங்க. அதனால, திருச்சி பொண்ணுங்க டபுள், டிரிபிள் லக்கிதான்''  சிரிக்கிறார் பாலமுரளி!
- மா.நந்தினி

Tuesday, February 18, 2014

கோடை விடுமுறையில் ஊதுவத்தி தயாரிக்கும் மாணவர்கள்




கோடை விடுமுறையைப் பயனுள்ளதாக கழிக்கும் வகையில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் ஊதுவத்தி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
÷குடும்ப வறுமையின் காரணமாக, பள்ளி நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் தங்களது பெற்றோர்களுக்கு உறுதுணையாக அவர்களது பணிகளை மாணவர்கள் கவனித்து வருகின்றனர்.
÷அந்த வகையில் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் பெற்றோருக்கு ஆதரவாக ஊதுவத்தி தயாரிக்கும் பணியில், திருத்தணியை அடுத்த மேதினிபுரம் கிராமத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
÷குடும்ப நிதிநிலையை உயர்த்த, ஊதுவத்தி தயாரிக்கும் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது.
÷தற்போது விவசாயம் மற்றும் எந்தவிதப் பணியும் இல்லாததால் மாற்றுத்தொழிலாக ஊதுவத்தி தயாரிக்கும் பணியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.  இந்த கிராமத்தில் மொத்தம் உள்ள 100 வீடுகளில் 85 சதவீதம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
÷இதேபோல் ஆர்.கே.பேட்டை, ராஜாநகரம், கோணசமுத்திரம், நொச்சிலி, கேசவராஜகுப்பம் உட்பட பல கிராமங்களில் குலத்தொழிலாக செய்து வருகின்றனர்.
÷இது குறித்து திருத்தணியை அடுத்த மேதினிபுரம் கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி கூறியது: "நாங்கள் இந்தத் தொழிலை கடந்த 15 ஆண்டுகளாக செய்து வருகிறோம். கோடைகாலம் என்பதால் விவசாயக் கிணறுகளில் தண்ணீர் இல்லாததால் பயிர் செய்ய முடியாமல் கட்டட வேலை, 100 நாள் வேலை ஆகியவற்றுக்குச் சென்று மதியம் ஓய்வு நேரத்தில் ஊதுவத்தி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.
÷ஊதுவத்தி தயாரிப்பதற்கான 2 வகையான மாவு மற்றும் குச்சிகளை ஏஜன்டுகளே நேரில் வந்து கொடுத்துவிட்டு செல்கின்றனர். பின்னர் வாரத்துக்கு ஒருமுறை வந்து நாங்கள் தயாரித்து வைத்த ஊதுவத்திகளை எடுத்துக் கொண்டு அதற்கான ஊதியத்தை வழங்கிவிட்டு செல்கின்றனர்.
÷ஒரு நாளைக்கு 3 ஆயிரம் ஊதுவத்திகள் தயார் செய்கிறோம்.
÷தற்போது பள்ளி விடுமுறை என்பதால் என்னுடன் எனது குழந்தைகளும் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தினசரி 5 ஆயிரம் ஊதுவத்திகள் தயாரிக்க முடிகிறது. ஆயிரம் ஊதுவத்தி தயார் செய்து கொடுத்தால் ரூ.25 வழங்குகின்றனர்' என்றார்.

ஊதுவத்தி தயாரிப்பு முறை .

ஊதுவத்தி முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படும் பொருளாகும்.
 இதற்கு பெரிய மூலதனம் தெவையில்ல. ஊதுவத்திகள் சாதி மத பேதமின்றி அனைவராலும் உபயோகிக்கப்படுகிறது. ஊதுவத்திகள் தயாரித்து நம் நாடுகளில் மட்டுமன்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். ஊதுவத்தி தயாரிக்க சுறு மூலதனத்துடன் குடும்பத்திலுள்ள நான்கைந்து நபர்களுடன் தொடங்கலாம். ஊக்கம் இருந்தால் போதும். போதுமான இலாபம் கிடைக்கும்.


ஊதுவத்தி வகைகள்

ஊதுவத்திகளில் அகர்பத்தி,சந்தனவத்திமட்டிப்பால் வத்தி. மல்லிகைப்பூவத்திதாழம்பூ வத்திரோஸ்வத்தி என்று பல விதமான மணம் கமழும் வத்திகள் இருக்கின்றன. இவை எல்லா வற்றையும் செய்யும் முறை ஒன்றுதான். ஆனால் சேர்க்கும் பொருள்கள் தான் வேறு.


 1. சந்தன வத்தி.
தேவையான பொருள்கள்

சந்தன பவுடர் -500கிராம்

சாம்பிராணி -500கிரம்

வெட்டிவேர் - 200 கிராம்

கிச்சிலிக் கிழங்குப் பொடி -100 கிராம்

புனுகு -2 கிராம்

கஸாதூரி -2 கிராம்

பன்னீர் -100 மில்லி   இவைகளை அறைக்க பயன்படும் இயந்திரம்

 உலர வைக்கும் இயந்திரம்
உலர வைக்கும் இயந்திரம் 



உலர வைக்கும் இயந்திரம் 

சைஸ் பண்ணும் இடம் 



சைஸ் பண்ணும் இடம் 



உலர வைக்கும் இடம்

வண்ணங்கள் திட்டும் இட

பேக்கிங்  செய்யும் இடம்

ஊதுவத்தி முழுக்க முழுக்க கைகளால் தயாரிக்கப்படும் பொருளாகும்

ஊதுவத்தி வகைகள்

ஊதுவத்திகளில் அகர்பத்தி,சந்தனவத்திமட்டிப்பால் வத்தி. மல்லிகைப்பூவத்திதாழம்பூ வத்திரோஸ்வத்தி என்று பல விதமான மணம் கமழும் வத்திகள் இருக்கின்றன. இவை எல்லா வற்றையும் செய்யும் முறை ஒன்றுதான். ஆனால் சேர்க்கும் பொருள்கள் தான் வேறு.

அடிப்படையான பொருள்
வழவழப்பான பலகை

ஊதுவத்தி தயாரிக்க முக்கியமாக வழவழப்பான மணை(பலகை) தேவை. சிமார் 60 செ.மீ நீளமும் 30 செ.மீ. அகலமும் உள்ள பலகை மீது வைத்துதான் ஊதுவத்திகள் தயரிக்கப்படுகின்றன.

மூங்கில் குச்சிகள்

சுமார் 15 செ.மீ முதல் 25 செ. மீ நீளம் வரை இருக்கும் மூங்கில் குச்சிகள் தேவை இவைகள் தயாரிப்புப் பொருள்கள் விற்கும் கடைகளிலேயே கிடைக்கும். இவை எல்லா வகையான ஊதுவத்தி தயாரிப்புக்கும் அடிப்படைத் தேவையாகும்

செயல் முறை

வெட்டிவேர் கிச்சிலிக் கிழங்குப் பொடி இரண்டையும் நன்றாக இடித்து மெல்லிய துணியில் சலித்து நைசாகத் தாயரித்துக்கொள்ளவும். அம்மியில் அல்லது கலுவத்தில் சாம்பிராணியை வைத்து விழுதாக அரையுங்கள். ஒரு பாத்திரத்தில் எடுத்துப் போட்டு அதனுடன் சந்தனப் பவுடர்வெட்டிவேர்கிச்சிலிக் கிழக்குப் பொடியைச் சேர்த்துப் பன்னீர் விட்டுக் கெட்டியாகப் பிசையவும். கடைசியில் புனுகுகஸ்தூரி இரண்டையும் சேர்த்துப் பிசையவும். விழுது கையில் ஒட்டக் கூடாது. அப்படியே ஒரு மணி நேரம் மூடி வைக்கவும்.

மூங்கில் குச்சிகளை எடுத்துச் சுத்தப்படுத்துங்கள். சுண்டைக்காயளவு மேற்கண்ட கலவையை எடுத்து மணையில் சிறிதளவாகப் பரப்பவும். ஒரு மூங்கில் குச்சியின் அடிப் பாகத்தில் இரண்டு செ.மீ விட்டு தள்ளி மணைமீது வைத்து கலவை குச்சியில் ஒட்டிக் கொள்ளுமாறு மெள்ள உருட்டவும். கலவைப் பொருள் குச்சியின் அடிப்பாகத்தில் இடம் விட்டது போக மீதமுள்ள பகுதி முழுவதும் சமமாகப் பரவி இருக்க வேண்டும். ஆரம்பத்தில் கடினமாகத் தோன்றினாலும் ஒருநாளில் பழகிவிட்டால் ஊதுவத்தி உருட்டுவதற்கு எளிதாக வரும். பின் கலவை ஒட்டியுள்ள பகுதியை இரண்டு விரல்கள் மற்றும் உள்ளங்கையால் தேய்த்து விடவேண்டும்.

பின் மெல்லிய எண்ணெய்க் காதிகத்தை ந்ழலில் பிரித்துப் போட்டு அதன் மீது பரப்பிவிடுங்கள். இரவு முழுவதும் உலர்ந்த பிறகு எல்லாவற்றையும் சேகரிக்கவும். குச்சியின் அடியில் வெற்றிடமாக உள்ள பகுதியில் ஏதேனும் ஒரு நிறச் சாயம் கொண்டு தோய்த்து விடுங்கள். பெரும்பாலும் சிவப்பு மற்றும் பச்சை சாயத்தையே தோய்ப்பர். இது பார்வைக்கு அழகாக இருப்பதுடன் அடிப்பகத்தைத் தனியேக் காட்டும்.

வசதியிருந்தால் அட்டைப் பெட்டிகள்அட்டைக் குழாய்கள் தகரக் குழாய்கள் தயாரித்து தேவைக்கேற்பவும் விலைக்கேற்பவும் 1050100 வத்திகளை மெல்லிய எண்னெய்க் காகிதத்தில் சுற்றி அதனுள் போட்டு மூடி விடலாம். இவற்றை எடுத்துச் சென்று கடைகளில் கொடுத்து விற்கச் செய்யலாம். அல்லது நீங்களே நேரிடையாகப் பொதுமக்களிடம் விற்கலாம்.



2. கதம்ப சந்தன வத்தி.

தேவையான பொருட்கள்

சந்தனப் பவுடர் -300 கிராம்

சாம்பிராணி -100 கிராம்

மட்டிப்பால் -75 கிராம்

மைனாலக்கிடிப் பட்டை -150 கிராம்

கிச்சிலிக்கிழங்கு -75 கிராம்

கோரைக் கிழங்கு -75 கிராம்

வெட்டிவேர் -30 கிராம்

விளாமிச்சம்வேர் -30 கிராம்

அன்னசிப் பூ -30 கிராம்

ரோஜாப் பூ -30 கிராம்

இலவங்கப்படை -30 கிராம்

இலவங்கம் -10 கிராம்

கார்போக அரிசி -30 கிராம்

ஜாதிப் பத்திரி -10 கிராம்

கிளியூரல்பட்டை -30 கிராம்

ஏலக்காய் -30 கிராம்

மரிக்கொழுந்து -30 கிராம்

தவனம் -30 கிராம்

ஜாதிக்காய் -இரண்டு

செய்முறை
சந்தனப் பவுடர்சாம்பிராணிமட்டிப்பால் தவிர மற்ற பொருள்களை நன்றாக இடித்து மெல்லிய துணியில் சலித்து ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போடவும். சாம்பிராணிமட்டிப்பால் இரண்டையும் அம்மி அல்லது கலுவத்தில் நைசாக அரைத்து அவற்றுடன் போடுங்கள். சந்தனப் பவுடரையும் போட்டு பன்னீர் கலந்து விட்டுப் பிசையுங்கள். எல்லாப் பொருள்களும் ஒன்றாகும் படி கலவையைப் பிசைந்ததும் மூடி ஒரு இரவு முழுதும் வைத்திருங்கள். மறுநாள் கலை எடுத்து ஊதுவத்தி தயாரியுங்கள். இந்த ஊதுவத்தி சந்தன மனத்துடன் பலவிதமான மணத்துடன் சேர்ந்து இருக்கும்

மேலும் விபரம் அறிய தொடர்பு கொள்ளவும்

U.K. Industries
Mr. Abdul Khuddus (Managing Director)
No. 3, Survey No. 55/25, Bellahalli Cross, Yelahanka Hobli
Bengaluru - 560064, Karnataka, India





Monday, February 17, 2014

பசங்க கண்ணு எல்லாம் பானு மேலதான்-எந்த ஊரில் என்ன வாங்கலாம்




அந்தியூர் அசத்தல்
காய்கறிச் சந்தை, மாட்டுச் சந்தை, ஆட்டுச் சந்தைபோல வருஷம் ஒரு முறை ஈரோடு மாவட்டம், அந்தியூரில் களைகட்டுகிறது குதிரைச் சந்தை. பரந்து விரிந்த மைதானம் எங்கும் ஆயிரக்கணக்கில் குதிரைகள் இரண்டு கால்களைத் தூக்கிக்கொண்டும் கனைத்துக்கொண்டும் கம்பீரமாய் நிற்கின்றன. குதிரைகளின் வாயைப் பிளந்து, அதன் பல்லைப் பார்த்தும் அதன் குளம்புகளைத் தட்டிப் பார்த்தும் விலை பேசிக்கொண்டு இருக்கிறார்கள் குதிரை வியாபாரிகள்.
    அந்தியூர் குருநாத சுவாமி கோயிலில் ஆகஸ்ட் மாதம் நடக்கும் பொங்கல் விழா புகழ்பெற்றது. அந்த விழாவுடன்  சேர்ந்துகொள்கிறது குதிரைச் சந்தையும். கோலாகலமாக நடக்கும் இந்தக் குதிரைச் சந்தைக்கு தமிழகம்,  கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து விதவிதமான குதிரைகளை ஓட்டி வருகிறார்கள் வியாபாரிகள்.
மன்னர்கள் காலத்தில், படை வீரர்களுக்கான குதிரையை வாங்கவும் விற்கவும் இந்தச் சந்தையை பயன்படுத்தி இருக்கிறார்கள். அந்தப் பாரம்பரியம் மாறாமல்  இங்கு இப்போதும் நடந்துவருகிறது  குதிரைச் சந்தை. சந்தையில் பல வகையான குதிரைகள் இருந்தாலும் கீழ்க்கண்டவைதான் ஸ்பெஷல். அவைகளைப் பற்றிய  சிறு குறிப்புகள்...
கட்டியவார் குதிரை:

உயர் ரகக் குதிரை வகை. 'கட்டியவார்’ என்பது வட மாநிலத்தில் புழங்கும் வார்த்தையாகும். இந்த வகைக் குதிரைகள் அழகாகவும் உயரமாகவும் இருக்கும். விலையும் அதிகம். ஒரு குதிரையின் விலை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் வரை நீள்கிறது. இந்தக் குதிரைகள் ஜவான்கள் செல்லவும் ஆடம்பரத் திருமணங்களில் சாரட் வண்டிகளை இழுத்துச்  செல்லவும் பயன்படுத்தப்படுகின்றன. கட்டியவார் குதிரைகளைக் கட்டி மேய்த்துக்கொண்டு இருந்தார் கோவை மாவட்டம், சரவணம்பட்டியைச்சேர்ந்த தம்பி என்பவர்.
''எனக்கு 30 வருஷமா குதிரைங்களோட பரிச்சயமுங்க. ஒரு குதிரை கனைக்கிறச் சத்தத்தை வெச்சே அதோட சாதி, குணம், ஆரோக்கியம் எல்லாத்தையும் சொல்லிப்போடுவேனுங்க. குதிரைங்க எல்லாம் குழந்தைங்க மாதிரி.  நாலைஞ்சு தடவை அதுங்களுக்கு ஒரு விஷயத்தை புரியுற மாதிரி அதோட பாஷையில சொல்லித் தந்துட்டோம்னா சாகிற வரைக்கும் சரியாச் செய்யுமுங்க. என்ன... அதுங்களை தினமும் அக்கறையா பார்த்துக்கோணும். தினமும் குளிப்பாட்டி உடம்பு எல்லாம் தட்டிவிட்டு, நீவிவிடணும். ரெண்டு வேளையும் புல்லுக்கட்டு,  கோதுமைத் தவிடு, கொண்டக்கடலை கொடுக்கோணும். இந்தாப் பாருங்க...  பானு. 68 அங்குலம் உசரத்துக்கு சும்மா நெலுநெலுனு அம்சமா வளர்ந்து நிக்கிறா. இந்தச் சந்தையில இருக்கிற அத்தனை பசங்களுக்கும் (குதிரைகள்தான்) இவ மேலதான் கண்ணு.  ரெண்டரை வயசு பொம்பளைப் புள்ளையைப் பொத்திப் பொத்திப் பாதுகாக்க வேண்டியதா இருக்கு. இவளோட பல், குளம்பு, காது, கண்ணுனு எல்லா அங்க லட்சணமும் ரொம்ப நல்லா இருக்குது. அதனால, இவளோட விலை 10 லட்சம் ரூபா. ஒரு ரூபா குறைவாக் கொடுத்தாலும் பானு கிடைக்க மாட்டா'' என்கிறார் பெருமிதத்துடன்.
மார்வான் குதிரை:
மார்வான் இனக் குதிரைகள், ராஜஸ்தானைப் பூர்வீகமாகக்கொண்டவை. கம்பீரம்  இதன் சிறப்பு. மன்னர்கள் காலத்தில், போர்க்களத்தில்  பயன்படுத்தப்பட்டவை இந்தக் குதிரைகள். இன்றும் இந்திய ராணுவத்தின் குதிரைப் படை மற்றும் காவல் துறையில் மார்வான்களின் பங்கு மிக மிக அதிகம். இந்த வகைக் குதிரையின் விலை 50ஆயிரம் ரூபாய் தொடங்கி மூன்று லட்சம் வரை போகும். இந்தக் குதிரையும்  தம்பியின் பராமரிப்பிலுள்ளது.  'தமிழகத்துல இந்தக் குதிரைங்க குறைவாத்தான் இருக்குது. இதோட பின்னங்காலு வளைஞ்சி இருக்கும்.  அதனால, இந்தக் குதிரைங்க மேல சவாரி செய்றது ரொம்ப வசதியா இருக்கும். இந்தக் குதிரையோட எடை, தலைச்சுழி, மினுமினுப்பு இதை எல்லாம் வெச்சுத்தான் விலையை நிர்ணயிக்கிறோம்'' என்றார்.
ரேஸ் குதிரை:
ரேஸ் குதிரைகள் 'இங்கிலீஷ் பினாட்’ வகையைச் சேர்ந்தவை. இவை ஆங்கிலேயர்களால் நம் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டவை. இதில் அரேபியன் குதிரை, ஓல்டன் பர்க், தரோவ்பின்ட் என்று மூன்று வகைகள் உள்ளன. இந்தக்குதிரைகள் 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் வரைக்கும் விற்கப்படுகின்றன.  குதிரையின் உரிமையாளர் சிவக்குமார், 'இந்த வகைக் குதிரைகளைத்தான் பந்தயங்களுக்குப் பயன்படுத்துவாங்க. உண்மையில் பல நேரங்களில் இந்தக் குதிரைகள் ஓடுவது இல்லை. வேகமாக நடக்கின்றன. அவ்வளவுதான்.  மணிக்கு சுமார் 70 கி.மீ. வேகத்தில் நடக்கும். அதுதான் நமக்கு ஓடுவதுபோலத் தெரிகிற்து. இவை ஓட ஆரம்பித்தால் மணிக்கு 130 கி.மீ. வேகம்தான்... ''  ஆச்சர்யத் தகவல் சொன்னார்.
மட்டக் குதிரை:
   இந்த வகைக் குதிரைகளுக்கு நாட்டுக் குதிரை என்கிற இன்னொரு பெயரும் உண்டு. உயரம் குறைவாக இருக்கும். கழுதையைப் போன்ற தோற்றம் கொண்டவை. பொதி சுமக்கவும்  வண்டி இழுக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.  இதன் விலை 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையாகும். கர்நாடக மாநிலத்தில் இருந்து இந்தக் குதிரைகள்  இந்தச் சந்தைக்கு வருகின்றன.
நாட்டியக் குதிரை:
    
இந்த வகைக் குதிரைகள்  விற்பனைக்கு இல்லை.  கண்காட்சிக்கு மட்டும் வைத்துள்ளார்கள். நான்கு கால்களிலும் சலங்கையைக் கட்டிவிட்டால்  'ஜல்ஜல்'  என்று ஜோராக நடனம் ஆடுகின்றன. இதன் உரிமையாளர் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த தேசக்குமார். 'என்கிட்டே ராஜு, சுவான்னு ரெண்டு நாட்டியக் குதிரைங்க வளருது. குதிரை குட்டியாக இருக்கிறப்பவே ஆறு மாச காலத்துக்கு நடனப் பயிற்சிக் கொடுப்போம். குதிரைக்கு முன்னாடி நின்னு எங்க கால்ல சலங்கையைக் கட்டிட்டுக் கையைக் காலைத் தூக்கிட்டு ஆடுவோம். அதைப் பார்த்துப் பார்த்துக் குதிரையும் நாட்டியம் ஆடக் கத்துக்கும். கோயில் விசேஷம், கல்யாணங்களுக்கு இந்தக் குதிரைங்களை ஆடவைப்போம்'' என்றார்.
அந்தியூர் சந்தையில் இப்படிக் குதிரைகள் மட்டும் அல்ல; அரிய வகை மலை மாடுகள், நாட்டு மாடுகள், நீண்ட காதுகளைக்கொண்ட ஜமுனாபாரி ஆடுகள், குறும்பாடுகள் எனப் பலவகையான கால் நடைகளும் அணிவகுக்கின்றன!
- மு.கார்த்திகேயன்

எந்த ஊரில் என்ன வாங்கலாம்-கருப்பட்டி

கிராமங்களில் இன்றும் ‘கருப்பட்டி’ காபி என்றால் ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம், மருத்துவ குணம்  அதிகம் இருக்கிறது. பனங்கருப்பட்டியில் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து தின்பண்டமாகவும் தயாரிக்கப்பட்டு வருகிறது. உடல்நலனுக்கு உகந்தது என்பதால்  இப்போது நகர மக்களிடையேயும் கிராக்கி அதிகரித்து வருகிறது. பனங்கருப்பட்டி உற்பத்தியில் ஈடுபடுவோர் மிக சிலரே என்பதால், அதை தயாரிக்க கற்றுக்  கொண்டால் லாபத்தை  அள்ளிக்கொடுக்கும் என்கிறார் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குளத்தூரில் ‘கவித்தமிழ்Õ என்ற பெயரில் பனங்கருப்பட்டி  தயாரிக்கும் முருகேசன். அவர் கூறியதாவது: 10 ஆண்டுக்கு முன்பு, பாத்திரக்கடையில் வேலை பார்த்தேன். கள் இறக்க அனுமதி இல்லாததால், இங்குள்ள பனை மரங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருந் தன. விவசாயிகளிடம் கேட்டு, மரம் ஏற ஆட்களை ஏற்பாடு செய்து பதநீர் இறக்கினேன். அதைக் காய்ச்சி கருப்பட்டியாக விற்றால் நல்ல லாபம்  சம்பாதிக்கலாம் என நினைத்து அத்தொழிலில் இறங்கினேன்.tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

துவக்கத்தில் குறைந்த அளவு பதநீர் கிடைத்தது. புட்டுக் கருப்பட்டி என்ற சின்ன சின்ன கருப்பட்டிகளை வீட்டிலேயே தயாரித்து கிராமங்களில் தெரு தெரு வாக கூவி நானே விற்றேன். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஒருநாள் தெருவில் விற்றுக் கொண்டிருந்தேன்.அப்போது தலையில் இருந்த கூடையை கீழே இறக்க குனிந்தபோது  வேட்டி கிழிந்தது. மானத்தை காக்க வேட்டி தேவை. கருப்பட்டி விற்காததால் புதுவேட்டி வாங்க கையில் காசும் இல்லை. அருகிலுள்ள சர்வோதயா சங்கத் தில் 2 கிலோ கருப்பட்டியைக் கொடுத்து வேட்டி வாங்கினேன். பணத்தைக் கொடுத்துவிட்டு கருப்பட்டியை வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி, மீதமுள்ள  கருப்பட்டியை விற்பதற்காக சென்றேன்.

 

பின்னர், சர்வோதயா சங்கத்தில் பணத்தை கொடுத்து கருப்பட்டியைக் கேட்டபோது, ‘நீங்கள் கொடுத்த கருப்பட்டி விற்று விட்டதுÕ என்றனர். அடுத்து வ ரும்போது மொத்தமாக சப்ளை செய்யும்படி கூறினர். அடுத்த முறை கொடுத்தேன். கருப்பட்டியை பிளாஸ்டிக் கவரில் போட்டு, லேபிள் வைத்து மாவட்டத் திலுள்ள அனைத்து சர்வோதயா கடைகளுக்கும் சப்ளை செய்யும்படி கூறினார்கள். தினசரி 10 கிலோ அளவு தயாரித்த எனக்கு, தற்போது 500 கிலோ அளவுக்கு ஆர்டர் கிடைக்கிறது. ஆனால், 100 கிலோவுக்கு மேல் உற்பத்தி செய்யும் அளவு  பதநீர் கிடைப்பதில்லை. ஆள் பற்றாக்குறையும் உள்ளது. இவ்வாறு முருகேசன் கூறினார்.

முதலீடு எவ்வளவு?

மூலப்பொருட்கள்: 

பனை பதநீர், சுக்கு, மிளகு, திப்பிலி.

கட்டமைப்பு: 

பதநீர் காய்ச்ச, கருப்பட்டி பாகு அச்சில் ஊற்ற ஒரு அறை. உலர வைக்க, பேக்கிங் செய்ய மற்றொரு அறை. மூலதனச் செலவு: கட்டிட அட்வான்ஸ் ரூ.20 ஆயிரம். கொப்பரை அல்லது அலுமினிய பாத்திரம் 4 கிலோ அளவுள்ளது ணீ600, அச்சுப்பலகை 6 அடி நீளம்  ரூ2000, உலர வைக்க 20 தட்டுக்கூடை ரூ1500, துடுப்பு, கரண்டி ரூ200, பேக்கிங் செய்ய எடை மெஷின் ரூ500 என கட்டமைப்புக்கு ரூ24,800 தேவை.

உற்பத்தி செலவு: 

தினசரி 100 கிலோ சுக்கு கருப்பட்டி தயாரிக்க 750 லிட்டர் பதநீர் வீதம், மாதம் 26  நாளில் 2,600 கிலோ பனை சுக்கு கருப்பட்டி தயாரிக்க  19,500 லிட்டர் பதநீர் தேவை. லிட்டர் ரூ10 வீதம் பதநீருக்கு மட்டும் மாதம் ரூ1.95 லட்சம், பிளாஸ்டிக் கவர் ரூ110, லேபிள் ரூ25, செலோ டேப், பார்சல்  பெட்டி, பேக்கிங் கயிறு உட்பட ரூ50. உற்பத்திக் கூலி தினசரி 5 பேருக்கு தலா ரூ150 வீதம், மாதம் ரூ19,500. இட வாடகை ரூ2,000 என உற்பத்திச் செலவுக்கு ரூ2.16 லட்சம் தேவை.

பதநீர் எங்கு வாங்கலாம்?

ஒரு லிட்டர் பதநீர் தோட்டங்களில் ரூ.10க்கு கிடைக்கும். மொத்த வியாபார கடைகளில் சுக்கு கிலோ ரூ255, மிளகு ரூ260, திப்பிலி ரூ650க்கு கிடைக்கும்.  பதநீர் போதிய அளவு கிடைக்காவிட்டால் கருப்பட்டி தயாரிக்கும் குன்னத்தூர், வேம்பாரை, தூத்துக்குடி, உடன்குடி, நாகர்கோவில், சிறுவலூர், வேலூர்  மாவட்டம் ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் தயாரிக்கும் கருப்பட்டியை வாங்கி வந்து, நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கும் பதநீரை ஊற்றி மீண்டும்  காய்ச்சி அதில் சுக்கு, மிளகு, திப்பிலி போட்டு சுக்கு கருப்பட்டியாக தயாரிக்கலாம். 

தயாரிக்கும் முறை 

கருப்பட்டி: அலுமினிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து 70 அல்லது 80 லிட்டர் பதநீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பாகு ஆனவுடன் அடுப்பில்  இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும். கொஞ்சம் ஆறிய பின்பு அச்சுப்பலகையில் ஊற்றினால், அரை மணி நேரத்தில் கட்டியாக மாறியிருக்கும். அச்சுக்கு ழியில் உள்ளவற்றை குச்சியால் நெம்பி எடுத்து, நன்கு ஆற வைக்க வேண்டும். 10 கிலோ கருப்பட்டி கிடைக்கும். பின்னர் பேக்கிங் செய்து விற்கலாம். சுக்கு கருப்பட்டி: பனங்கருப்பட்டி தயாரிப்பு முறையில் 70 அல்லது 80 லிட்டர் பதநீர் கொதிக்கும்போது 200 கிராம் சுக்கு, 75 கிராம் மிளகு, 50 கிராம்  திப்பிலி ஆகியபொடி கலவையை போட்டுக் கலக்கி கொதிக்க வைக்க வேண்டும். மற்றவை பனங்கருப்பட்டி தயாரிப்பு போலவே.

மாத லாபம் ரூ31 ஆயிரம்

தினமும் 100 கிலோ கருப்பட்டி வீதம் உற்பத்தி செய்து மாதம் சுமார் 2600 கிலோ தயாரிக்க முடியும். கருப்பட்டி ஒரு கிலோ ரூ90க்கும், பனம் சுக்கு கருப்ப ட்டி ரூ100க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. மாத உற்பத்திச் செலவு ரூ2.16 லட்சம். விற்பனை வருவாய் சராசரியாக கிலோவுக்கு ரூ95 வீதம், மாத லாபம்  ரூ31 ஆயிரம்.

பனங்கற்கண்டு தயாரிக்கலாம்

100 லிட்டர் பனை பதநீரை கொப்பரையில் ஊற்றி 110 டிகிரி வெப்பத்தில் கொதிக்க வைக்க வேண்டும். அடுப்பிலிருந்து இறக்கிய கொப்பரையை மூடி நிலத் துக்கடியில் புதைக்க வேண்டும். 40 நாள் கழித்து கொப்பரையை வெளியே எடுத்தால் உள்ளே பதநீர் பனங்கற்கண்டாக மாறியிருக்கும். 100 லிட்டர் பதநீருக்கு  5 கிலோ பனங்கற்கண்டு கிடைக்கும். கிலோ ரூ300 முதல் ரூ500 வரை விற்கலாம்.

விற்பனை வாய்ப்பு

புட்டு கருப்பட்டி, சுக்கு கருப்பட்டி தயாரிப்பு தேதியில் இருந்து ஒரு ஆண்டுக்கு கெடாது. சுக்கு கருப்பட்டிக்கு அதிக வரவேற்பு உள்ளது. 100 கிராம், 200  கிராம் பாக்கெட்களில் தின்பண்டமாக விற்கலாம். தமிழகத்திலுள்ள சர்வோதய சங்கங்கள், கடலூர் பனை பொருள் தயாரிப்பு நிலையம் மற்றும் தமிழகம்  உள்ளிட்ட கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்கள், முக்கிய விற்பனை நிலையங்களில் நல்ல வரவேற்பு உள்ளது.  வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சப்ளை குறைவாக இருப்பதால் கிராக்கி உள்ளது.  

மருத்துவ குணம்

சீரகத்தை வறுத்து சுக்கு கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஓமத்தைச் சேர்த்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும்.
25 கிராம் குப்பைமேனி கீரையுடன் 25 கிராம் கருப்பட்டி எடுத்து வாணலியில் வதக்கி சிறு துண்டுகளாக சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளி  குணமாகும். இஞ்சி டீயிலும் இதைக் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.



கருப்பட்டி கதை கேளூ...!



தற்போது 20, 30 வயதுகளிலேயே... Ôசர்க்கரை வியாதி வந்துவிடுமோÕ என்கிற
 பயத்துடனேயே திரிகிறார்கள் பலரும். 30 வயது கடந்த நிலையிலேயே பலரும்
 அந்த நோய்க்கு ஆட்பட்டு அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்! ஏன்... 
குழந்தைகள் கூட இப்போதெல்லாம் சர்க்கரை நோய் (டைப் 2) தாக்குதல்
 காரணமாக பாதிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது! ஆனாலும்கூட
 கருப்பட்டியின் மகத்துவத்தை இன்னமும் உணராமல்தான் இருக்கிறார்கள்
 நம்மவர்கள்!


கருப்பட்டி பயன்படுத்துவது ஒரேயடியாகக் குறைந்து போக... அதன் உற்பத்தியும்
 பெருமளவு குறைந்து விட்டது. என்றாலும்... பாரம்பரியத்தை மறக்காத
 பகுதிகளில் கருப்பட்டி உற்பத்தி சுறுசுறுப்பாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.
 தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவு
 கருப்பட்டி உற்பத்தி செய்யப்படுகிறது.

நாலரை லட்சம் பனை மரங்கள்!
வட்டன்விளை கிராமத்தைச் சேர்ந்த பனைபொருள் உற்பத்தியாளர்
 ராமச்சந்திரனை, அவரது பனை மரத் தோப்பில் சந்தித்தபோது...இருபது 
வருஷங்களுக்கு முன்ன சுமார் 790 ஹெக்டேர் பரப்பளவுல, சுமார் 4 லட்சத்து 50
 ஆயிரம் பனைமரங்கள் கற்பகவிருட்சமா பயன் தந்திட்டிருந்துச்சு. உள்ளூர் 
ஆட்கள் தவிர, திருநெல்வேலி, கன்னி-யாகுமரி மாவட்டங்கள்ல இருந்தும்
 பனைஏறும் தொழிலாளிகள் வந்து தங்கியிருந்து, மரம் ஏறுவாங்க. ஒரு
 நாளைக்கு ஒவ்வொரு மரத்துலயும் மூணு தடவை ஏறுவாங்க. அந்தக் 
காலத்துல ‘கள்‘ இறக்கறதுக்கு அனுமதி இருந்ததால... கள் வியாபாரம் 
அமோகமா நடந்துச்சு. பனை ஏறுற தொழிலை மட்டுமே நம்பி
 கிட்டத்தட்ட ரெண்டாயிரம் குடும்பங்கள் இருந்துச்சு. திரும்பிய
 திசையெல்லாம் கருப்பட்டித் தொழில் கமகமத்த காலம் அது என்று
 பனை பெருமை பேசினார்.

நாட்டுக்கோழி வளர்ப்பில் 'நச்'லாபம்


பொங்கல் பண்டிகை என்றாலே கிராமங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, சேவக்கட்டு (சேவல் சண்டை) எனப் பாரம்பரிய விளையாட்டுகள் களைகட்டும். சேவல் சண்டை, பொங்கல் சமயம் மட்டுமல்லாமல் கோயில் விழாக்களின்போதும் தொன்றுதொட்டு நடந்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும்... பெருமைக்காக அந்தஸ்துக்காக சண்டைச் சேவல்களை வளர்ப்பவர்களும் உண்டு. பக்கத்து மாநிலங்களில் சண்டைச் சேவலுக்குத் தேவை இருப்பதால், சேவல்களைப் பயிற்றுவித்து விற்பனை செய்பவர்களும் உண்டு.
பெரும்பாலும், சேவல் சண்டைக்கு நம்நாட்டு இனமான அசில் வகை சேவல்களைத்தான் தேர்வு செய்வார்கள். இது நன்கு பெருத்து வளரக்கூடியது என்பதுதான் முக்கிய காரணம். அசில் போலவே பெருத்து வளரக்கூடிய இன்னொரு இனம்... 'சிட்டகாங்’ எனும் நாட்டுரகச் சேவல். இந்த இரண்டு இனங்களையும் கலப்புசெய்து, பெருவட்டு இனக் கோழிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார், திண்டுக்கல் மாவட்டம், காப்பிளியப்பட்டி, பாலமுருகன்.

கட்டுமானத்தொழிலில் இருந்து கால்நடை வளர்ப்புக்கு!
காலை வேளையொன்றில்... கோழிகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்த பாலமுருகனைச் சந்தித்தோம்.
''எங்களுக்கு ஊர்ல ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கு. விவசாயம்தான் குடும்பத்தொழில். டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, கோயம்புத்தூர்ல பத்து வருஷம் வேலை பாத்தேன். குடும்பத்தை விட்டு பிரிஞ்சே இருந்ததால, குடும்பத்தோட இருக்கணும்னு நினைச்சேன். விவசாயம் பண்ணி பொழைச்சுக்கலாம்னு மூணு வருஷத்துக்கு முன்ன ஊருக்கு வந்துட்டேன். எங்க தோட்டத்துல தண்ணி வசதி இல்லாததால, தென்னம்பட்டியில இருக்கற இந்தத் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்தேன். கோ.எஃப்.எஸ்-29 தீவனச்சோளம், கோ-4 மாதிரியான பசுந்தீவனப் பயிர்களை விதைச்சு... 16 கலப்பின பால் மாடுகளை வாங்கி, பால் உற்பத்தி பண்ண ஆரம்பிச்சேன். ஒரு நாளைக்கு 250 லிட்டர் பால் கிடைச்சுட்டு இருந்தது. ஆனா, கொஞ்ச நாள்லயே கிணத்துல தண்ணி வத்திடுச்சு. அதனால, தீவனம் உற்பத்தி பண்ண முடியாததால... பத்து மாடுகளை வித்துட்டேன். இப்போ ஆறு மாடு மட்டும் கையில இருக்கு. மாடுகளுக்கு போட்ட ஷெட்டுல, கோழிகளை வளர்க்க லாம்னு தோணுச்சு. அதனால ஒன்றரை வருஷமா கோழிகளை வளர்த்திட்டிருக்கேன்'' என்று  முன்னுரை கொடுத்த பாலமுருகன், தொடர்ந்தார்.
  
நாட்டுக்கோழிக்குத் தேவை அதிகம்!
''ஆரம்பத்துல... 'அழகுக்கோழிகளை வளர்க்கலாம்... நாட்டுக்கோழிகளை வளர்க்கலாம்’னு பலரும் ஆலோசனை சொன்னாங்க. நான், நமக்கு பக்கமான ஒட்டன்சத்திரம், அய்யலூர் சந்தைகள்ல எந்தக் கோழிக்கு மார்க்கெட் நல்லாயிருக்குனு பார்த்து, அதைத்தான் வளர்க்கணும்னு முடிவு பண்ணி... சந்தைகளுக்கு அடிக்கடி போயிட்டு வந்தேன். அப்போ, நாட்டுக்கோழிகளுக்கு நல்ல மார்க்கெட் இருந்தாலும், பெருவட்டு சேவல்களையும், கோழிகளையும் எல்லாரும் விரும்பி வாங்கறதைப் பாத்தேன். குறிப்பா, அசில் சேவல்களுக்கு நல்ல கிராக்கி இருந்துச்சு. விலையும் நல்லா கிடைக்கறதைத் தெரிஞ்சுக்கிட்டேன். நாமக்கல் கே.வி.கே-யிலயும் விசாரிச்சுட்டு அசில், சிட்டகாங் வகைக் கோழிகளை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன்.
பெரும்பாலும், அசில் சேவல்களைத்தான் சண்டைக்குப் பயன்படுத்துவாங்க. அதனால, இதுக்கு நல்ல தேவை இருக்கு. நான் ரெண்டு ரகங்களையும் கலந்து கோழிகளை உருவாக்குறப்போ... கோழி, சேவல்கள் நல்ல பெருவெட்டா வருது. இப்போ, கையில அசில், சிட்டகாங் ரெண்டு ரகத்துலயும் சேர்த்து 10 சேவல்கள், 100 கோழிகள்,
100 குஞ்சுகள் வெச்சுருக்கேன். நான் உற்பத்தி பண்ணுன குஞ்சுகளை முதல் தடவை விற்பனை செய்து கிடைச்ச வருமானத்துல... பொள்ளாச்சியில இருந்து நூறு கடக்நாத் வகை கோழிக் குஞ்சுகளை வாங்கிட்டு வந்தேன். அதெல்லாம் இப்போ பருவத்துக்கு வர்ற வயசுல இருக்கு. இது, பழங்குடி மக்கள் வளர்க்கற ரக கோழி. இதோட கறி, கருப்பு நிறத்துலதான் இருக்கும். ரொம்ப மருத்துவ குணம் வாய்ந்த கறி. இந்தக் கோழி நல்ல விலைக்குப் போகும்'' என்ற பாலமுருகன், கடக்நாத் கோழிகளைக் காட்டியபடியே தொடர்ந்தார்.
வளர்ப்புக்கு மட்டும் விற்பனை!
''அசில், சிட்டகாங் கோழிகள் ஒரே மாதிரி இருக்கறதால தானாவே சேர்ந்து இனப்பெருக்கம் செஞ்சுக்கும். ஆனா, கடக்நாத் கோழிகள் அந்த இனத்தோட மட்டும்தான் சேரும். அதனால, இனம் கலக்குறதுக்கு வாய்ப்பில்லை. சராசரியா, இப்போ ஒரு நாளைக்கு பத்து முட்டைகள் கிடைச்சுட்டு இருக்கு. அதை இன்குபேட்டர்ல பொரிக்க வெக்கிறேன். ஊளை முட்டைகள் போக, மாசத்துக்கு சராசரியா 200 குஞ்சுகள் உற்பத்தி ஆகுது. நான் குஞ்சுகளா விக்கிறதில்லை. அம்பது, அம்பத்தஞ்சு நாள் வரைக்கும் வளர்த்துத்தான் விக்கிறேன். அதேமாதிரி, கறிக்காகவும் விக்கிறதில்லை. வளர்ப்புக்காக தாய்க்கோழிகளா மட்டும்தான் விக்கிறேன். சேவக்கட்டுக்காக சேவல்களைத் தனியாவும் வாங்கிக்கிறாங்க'' என்ற பாலமுருகன், பராமரிப்பு முறைகளை விளக்கினார்.
''50 அடி நீளம் 10 அடி அகலத்துல கூரைக் கொட்டகை போட்டிருக்கேன். சுத்தி கம்பி வலை இருக்கு. கோழிகளுக்கு எப்பவும் தண்ணி கிடைக்கற மாதிரி நாசில் பைப் வசதி செஞ்சு வெச்சுருக்கேன். ஷெட்டுக்கு மேல பிளாஸ்டிக் பால் கேனை வெச்சு... அதுல குழாய்களை இணைச்சுருக்கேன். இந்த கேனை தினமும் தண்ணி ஊத்தி நிரப்பி வெச்சுடுவோம். தேவைப்படும்போது கோழிகள் குடிச்சுக்கும். தினமும் காலையில தீவனத்தை தொட்டியில நிரப்பி வெச்சுடுவோம். நாட்டுக்கோழிக்குனு பிரத்யேகமா கம்பெனித் தீவனம் கடைகள்ல கிடைக்குது. அதைத்தான் கோழிகளுக்குக் கொடுக்குறோம். தினமும் சேகரமாகற முட்டைகளை எடுத்து பத்திரப்படுத்திடுவோம்.
ஒவ்வொரு செட்டா இன்குபேட்டர்ல வெச்சு பொரிப்போம். இதுக்காவே தனியா இன்குபேட்டர் ரூம் இருக்கு. இன்குபேட்டர் மூலமா 21 நாள்ல குஞ்சு பொரிஞ்சுடும். அப்பறம் சுத்தப்படுத்திட்டு, அடுத்த செட் முட்டைகளை வெச்சுடுவோம். குஞ்சு பொரிச்சவுடனே ஈரம் காயுற வரைக்கும் இன்கு பேட்டருக்குள்ளேயே வெச்சுடுவோம். அதுக்கப்பறம், அதை புரூடருக்கு மாத்துவோம். தரையில் தவிட்டைப் பரப்பி, அதுக்கு மேல நியூஸ் பேப்பரை விரிச்சு, நாலடி விட்டத்துக்கு வட்டமா அட்டை, பாய் இல்லனா தகரத்தை சுத்தி வெச்சு... இதுல வெப்பத்துக்காக பல்புகளை எரிய விடணும். இதுதான் புரூடர். கூண்டுக்குள்ளகூட இந்த மாதிரி வசதியைப் பண்ணிக்கலாம். இப்போ கரன்ட் அடிக்கடி கட் ஆகறதால, மண் பானைக்குள்ள மூட்டம் போட்டு வெச்சுடுறோம். இது குஞ்சுகளுக்கு கதகதப்பா இருக்கும்.
குஞ்சுகள் பொரிஞ்சு வந்த முதல் நாள், குளுக்கோஸ் தண்ணி மட்டும் கொடுப்போம். ரெண்டாவது, மூணாவது நாள்ல அரைச்ச மக்காச்சோளம் கொடுப்போம். அதுக்கப்பறம், கம்பெனி தீவனம் கொடுக்குறோம். ஒரு மாசம் கழிச்சு குஞ்சுகள கொட்டகைக்கு மாத்திடுவோம். அம்மை, கழிசல் நோய்களுக்கான மருந்துகளை... பிறந்ததுல இருந்து ஏழாம் நாள், பதினஞ்சாம் நாள், இருபத்தோராம் நாள், முப்பத்தஞ்சாம் நாள், அம்பத்தஞ்சாம் நாள்னு முறையா கொடுத்துடுவோம். அதுக்கப்பறம் மாசத்துக்கு ஒரு தடவை மருந்து கொடுப்போம். இதெல்லாம் கட்டாயம் கொடுக்க வேண்டிய மருந்து'' என்று பராமரிப்பு முறைகளை விளக்கிய பாலமுருகன், நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.
ஒரு ஜோடி 1,500 ரூபாய்!
''நல்லா செழிம்பா தீவனம் கொடுத்து வளர்க்கறதால கோழிகள் மூணு மாசத் துலேயே ரெண்டு கிலோ வரைக்கும் எடை வந்துடும். அம்பது, அம்பத்தஞ்சு நாள் வளர்த்துதான் விற்பனை செய்றேன். வளர்ப்புக்கு மட்டுமே கொடுக்கறதால ஒரு ஜோடி 1,500 ரூபாய்னு விற்பனை செய்றேன். மாசத்துக்கு 50 ஜோடி வரைக்கும் விற்பனை செய்றேன். வீட்டுத்தேவைக்கும், ரொம்ப நெருங்கின நண்பர்களுக்கும்தான் கறிக்காக கோழியை எடுத்துக்குவோம். இதெல்லாம் போக மீதியை பண்ணையிலயே வளர்த்துடுவோம். மூக்கு வளைஞ்சு, கிளி மூக்கு மாதிரி இருக்கற சேவல்களை சண்டைக்குப் பழக்க வாங்குவாங்க. இதுக்குக் கூடுதல் விலை கிடைக்கும். தீவனச் செலவு, பராமரிப்புச் செலவு எல்லாம் போக நாட்டுக்கோழி மூலமா மாசத்துக்கு சராசரியா அம்பதாயிரம் ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்குது'' என்று சந்தோஷமாகச் சொன்னார் பாலமுருகன்.
 தொடர்புக்கு,
பாலமுருகன்,
செல்போன்: 95855-24061.

நெகிழ வைக்கும் ஒரு  நிஜ  கதை


காதலில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் ஜெயிப்பதுதான் காதலுக்கு மரியாதை! அப்படி தங்கள் காதலுக்கு மரியாதை செய்த பல்லாயிரம் தம்பதிகளில், மதுரையைச் சேர்ந்த ராஜ்குமார் - ஸ்ரீபிரியா தம்பதிக்கும் இடமுண்டு. காதலித்த நாட்களின் ரொமான்ஸ் நிகழ்வுகள்; திருமணத்தின்போது ஏற்பட்ட பதற்றங்கள்; கணவன் - மனைவியாக அவதாரமெடுத்த பின் பொருளாதார நெருக்கடியால் ஆசைப்பட்ட வாழ்வை வாழ முடியாமல் போன விரக்தி; நம் காதல் ஜெயித்தே தீர வேண்டும் என்று எதிர்நீச்சல் போட்டு இன்று கரை சேர்ந்திருக்கும் வாழ்க்கைப் பயணம் என... ஒரு விறுவிறு காதல் 'கம்’ குடும்பப் படம் பார்த்த உணர்வு அவர்களின் கதை. கேட்போமா..?!
''இப்போ நாங்க வாழுற வாழ்க்கை இவ்வளவு வசதியா, சந்தோஷமா இருக்கக் காரணம்.... எங்களை வாழ்க்கையில் போராடி ஜெயிக்க வெச்ச எங்க காதல்தான்!''
- 15 வருடங்களுக்கு முன் மலர்ந்த தங்கள் காதலின் ஆசைப் பக்கங்களை அசைபோடத் தொடங்கினார் ராஜ்குமார்.
''அப்போ நான் எம்.காம் படிச்சுட்டு இருந்தேன். தாடி வெச்சுருப்பேன். தினமும் போற வழியில ஒருநாள் ஒரு லெட்டர். எடுத்துப் பிரிச்சுப் பார்த்தா, 'டியர் தாடி, உங்களை ரொம்ப பிடிச்சுருக்கு. உங்க பேர் என்ன?’னு கேட்குது அந்தக் கடிதம். அன்னிக்கு நைட் எல்லாம் தூக்கமே வரல. 'நம்மளையும் ஒரு பொண்ணு லவ் பண்ணுதா..?’னு ஒரே ஆச்சர்யம். கடிதத்துக்கு சொந்தக்காரியை தெரிஞ்சுக்கிற முயற்சியில இறங்கினப்போ, என் தேவதையா முன்ன வந்தா ஸ்ரீபிரியா'' என்று ராஜ்குமார் நிறுத்த,
''எங்க வீட்டுக்கு எதிரே இருக்கிற டீ கடையில டீ குடிக்கவும், பக்கத்துல கிரிக்கெட் விளையாடவும் இவர் அடிக்கடி வருவார். அவரோட தாடிதான் என்னைக் கவர்ந்தது. லெட்டருக்குப் பிறகு, நாட்கள் சூப்பரா நகர்ந்துச்சு. ரெண்டு பேரும் ஒரே ஏரியா. எங்க வீட்டு ஜன்னல் வழியாவே காதல் வளர்த்தோம். சாதி, வசதி இது ரெண்டும் எங்க திருமணத்துக்குப் பெரிய தடைகளா இருக்கும்னு எங்களுக்குத் தெரியும். என்ன பிரச்னை வந்தாலும், எல்லாத்தையும் சமாளிச்சு கல்யாணம் பண்ணிக்கணும்னு ரெண்டு பேருமே உறுதியா இருந்தோம்.
நான் பி.பி.இ படிச்சுட்டிருந்த சமயம், திடீர்னு ஒருநாள் அவர், 'ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம் செஞ்சுக்குவோம். நீ உங்க வீட்டுலயே இரு, நான் என் வீட்டுலயே இருக்கேன்’னு சொன்னார். 'அலைபாயுதே’ சினிமாவெல்லாம் வராத சமயம் அது. எனக்கு அதிர்ச்சியாவும், பயமாவும் இருந்துச்சு. இருந்தாலும், நாங்க பிரிஞ்சுடாம இருக்கறதுக்கு இது ஒரு பாதுகாப்பா தெரிஞ்சதால சம்மதிச்சேன். ஒரு கட்டத்துல வீட்டுக்கு விஷயம் தெரிய வந்தப்போ, வீட்டுலயே பூட்டி வெச்சுட்டாங்க. அங்க இருந்து தப்பிக்க, ஆட்கள் துரத்த, கார்லயே ஊர் ஊரா ஓட... அந்தக் கார்லயே அவர் தாலி கட்டினதை எல்லாம் இன்னிக்கு நினைச்சாலும் சிலிர்ப்பா இருக்கு!'' என்றபோது, 'களவாணி’ திரைப்படம் கண்ணில் வந்து போனது நமக்கு. தொடர்ந்தார் ராஜ்குமார்...
''அவங்க அப்பா, 'ஒரு பைசா கூட நான் தரமாட்டேன்'னு சொல்லிட்டார். நாங்களும் அதை துளியும் எதிர்பார்க்கலங்கறதை அவர்கிட்ட சொல்லிட்டு, பாதி கட்டியும் கட்டாமலும் இருந்த நண்பரோட வீட்டில்தான் முதல்ல தங்கியிருந்தோம். அந்த நாட்கள், 'காதல் சடுகுடு’தான். குழந்தையும் பிறக்க, சந்தோஷமா இருந்தோம். ஆனா, நான் பார்த்துட்டு இருந்த நகைத்தொழில்ல திடீர் நஷ்டம் ஏற்பட, அதலபாதாளத்துக்குப் போயிட்டோம். அதுக்கு மேல போராடத் தெம்பு இல்லாம... ஒரு பக்கம் விஷத்தையும் இன்னொரு பக்கம் அண்ணன் அல்லது நண்பர்கள் உதவி பண்ணுவாங்க என்ற நம்பிக்கையையும் வெச்சுட்டு நின்னோம். நம்பிக்கை பொய்க்க, குழந்தைக்கு மட்டும் கொடுக்காம நாங்க ரெண்டு பெரும் விஷத்தைக் குடிச்சுட்டோம். ஆனா... எப்படியோ பிழைச்சுட்டோம்'' என்றபோது, நமக்கு ஏக அதிர்ச்சி!
''நாங்க உயிர் பிழைச்ச அந்த நொடி, அழகா அமைஞ்ச காதல் வாழ்க்கையை, வீணாக்க முடிவெடுத்த முட்டாள்தனத்தை உணர்ந்தோம். பரிதாபத்தைவிட, 'காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு நீங்க என்ன சாதிச்சீங்க... முடிவை பார்த்தீங்களா..?’ என்ற ஏளனத்தைத்தான் சமூகம் எங்க மேல தெளிச்சுது. அதுதான், 'வாழ்க்கையில நாம ஜெயிச்சே தீரணும்’கற வைராக்கியத்தோட எங்களை எழுந்திருக்க வெச்சது. ரெண்டு பேரும் காளான் வளர்ச்சி பற்றிய பயிற்சிக்குப் போனோம். அதைப் பற்றி தேடித் தேடி நிறைய கத்துக்கிட்டோம். சின்ன முதலீட்டோட ஒரு தொழிலா எடுத்து செய்தோம். ஒவ்வொரு நாள் முடிவிலும், விடியல்லயும் 'நாம ஜெயிச்சுக் காட்டணும்’னு மந்திரமா சொல்லிக்கிட்டோம். உலகத்துலயே ஆகப் பெரிய சக்தி, அன்புதான். அவர் எனக்காகவும், நான் அவருக்காகவும் மாறி மாறி உழைக்க, நாலு வருஷத்துல, இப்போ 'பசுமை பால் காளான் பண்ணை’ உரிமையாளர் ஆகியிருக்கோம். அதுபற்றிய பயிற்சிகளையும் வழங்குறோம். மாசம் லட்சத்துக்கும் மேல வருமானம் வருது!'' என்றபோது, சந்தோஷத்துடன் கண்ணீரும் ததும்புகிறது ஸ்ரீபிரியா விழிகளில்!
''இப்போவெல்லாம் தொட்டதுக்கெல்லாம் சண்டை போடுற காதலர்களையும், ஒருத்தரை ஒருத்தர் குற்றம் சொல்ற தம்பதிகளையும் பார்க்கும்போது எங்களுக்கு வேடிக்கையா இருக்கு. சந்தோஷமான தருணங்கள்ல சேர்ந்திருக்கிறது பெருசில்ல. துயரமான நேரங்களையும் கைகோத்து கடக்குறதுதான் காதலுக்கு அழகு, அதுதான் காதலோட அர்த்தம்... எங்கள மாதிரி!''
- மனைவியின் முகம் பார்த்துப் புன்னகைக்கிறார் ராஜ்குமார்!

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites